6 48
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கப்படாது : நாமல் திட்டவட்டம்

Share

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கப்படாது : நாமல் திட்டவட்டம்

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு செயற் திட்டமும் எம்மிடமில்லை என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

பியகம பிரதேசத்தில் இன்று(30) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து மக்களதும் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு அரசியல் நோக்கமுடையவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தமது கடமையல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது கொள்கையில் நாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு சட்டமோ சரத்தோ கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்தி மக்களின் நலன்களை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...