2 51
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஏற்படவுள்ள பெரும் குழப்ப நிலை – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

இலங்கையில் ஏற்படவுள்ள பெரும் குழப்ப நிலை – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் போது குழப்ப நிலைமை ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இரண்டாவது விருப்பத்தேர்வை எண்ண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டாவது விருப்பத்தேர்வை எண்ணி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறாவிட்டால் பெரும் குழப்பங்கள் ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவம் காரணமாக, உலக ஒழுங்கை பேணுவதற்கு சமகால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அதிகாரத்தில் வைத்திருக்க வெளிநாட்டு சக்திகள் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...

dinamani 2025 11 28 gas8xazv AP25332344411320 750x430 1
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் புயல் வெள்ளப் பலி 631 ஆக உயர்வு: மீட்புப் பணிகள் தொடர்கின்றன!

இந்தோனேஷியாவின் அசேப் மாகாணம் மற்றும் சுமத்ரா தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட புயல்கள் மற்றும் கடும்...