27 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல்கள், பதில் தாக்குதல்களில் 60க்கும் மேற்பட்டவர்கள் பலி

Share

பாகிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல்கள், பதில் தாக்குதல்களில் 60க்கும் மேற்பட்டவர்கள் பலி

பாகிஸ்தானின் (Pakistan) அமைதியற்ற மாகாணமாக கருதப்படும் பலுசிஸ்தானில் (Balochistan) உள்ள காவல் நிலையங்கள், தொடருந்து பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் மீது பிரிவினைவாத தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பதிலடி தாக்குதல்களில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல்கள் நேற்று (27.08.2024) நடத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக இந்த மாகாணத்தில் பிரிவினைவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே நேற்றைய தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.

ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் நடந்த தாக்குதல்களுக்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் 12 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பெரிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் முதல் சரக்கு பாரவூர்திகள் வரை வாகனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களின்போது, இடம்பெற்ற சண்டையில் 14 படையினரும், பொலிஸாரும், 21 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் குறைந்தது 23 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 35 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், தொடருந்து பாலத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு அருகில் இதுவரை அடையாளம் காணப்படாத 6 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

போராளிக் குழுவான பலூச் விடுதலை இராணுவம் இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளது.

பலுசிஸ்தானின் எரிவாயு மற்றும் கனிம வளங்களை நியாயமற்ற முறையில் சுரண்டுவதாகக் கூறி பல தசாப்தங்களாக மத்திய அரசாங்கத்துடன் போரிட்டு வரும், பிரிவினைவாதிகள், மாகாணத்தில் இருந்து சீனாவை வெளியேற்றி மாகாணத்திற்கு சுதந்திரத்தை கோரி வருகிறது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...