12 23
இலங்கைசெய்திகள்

கடன் செலுத்துவது தொடர்பில் வேட்பாளர்களிடம் திட்டமில்லை – திலித் ஜயவீர

Share

கடன் செலுத்துவது தொடர்பில் வேட்பாளர்களிடம் திட்டமில்லை – திலித் ஜயவீர

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களிடம் கடன் செலுத்துகை தொடர்பான மூலோபாயத் திட்டங்கள் கிடையாது என தொழிலதிபரும் ஜனாதிபதி வேட்பாளருமான திலித் ஜயவீர (Dilith Jayaweera) தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் (Anuradhapura) இன்று (25.08.2024) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுக் கொண்டு பலரும் ஊழலை இல்லாதொழிப்பது பற்றி பேசுவதாக கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்களது மாதாந்த வருமானத்தை பார்த்த போது, தமக்கு கவலை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வேட்பாளர்கள் மாதமொன்றுக்கு ஒன்று, இரண்டு இலட்சத்தில் வாழ்வதாகத் தெரிவித்துள்ளார்.

மக்களினால் வாழ முடியாத தொகையில் இவர்கள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அனைவரும் கறுப்பு பொருளாதாரத்தின் பங்குதாரர்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உழைக்கும் வருமானத்தில் இவர்கள் வரி செலுத்தியதில்லை என திலித் ஜயவீர, ஏனைய வேட்பாளர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...