12 23
இலங்கைசெய்திகள்

கடன் செலுத்துவது தொடர்பில் வேட்பாளர்களிடம் திட்டமில்லை – திலித் ஜயவீர

Share

கடன் செலுத்துவது தொடர்பில் வேட்பாளர்களிடம் திட்டமில்லை – திலித் ஜயவீர

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களிடம் கடன் செலுத்துகை தொடர்பான மூலோபாயத் திட்டங்கள் கிடையாது என தொழிலதிபரும் ஜனாதிபதி வேட்பாளருமான திலித் ஜயவீர (Dilith Jayaweera) தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் (Anuradhapura) இன்று (25.08.2024) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுக் கொண்டு பலரும் ஊழலை இல்லாதொழிப்பது பற்றி பேசுவதாக கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்களது மாதாந்த வருமானத்தை பார்த்த போது, தமக்கு கவலை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வேட்பாளர்கள் மாதமொன்றுக்கு ஒன்று, இரண்டு இலட்சத்தில் வாழ்வதாகத் தெரிவித்துள்ளார்.

மக்களினால் வாழ முடியாத தொகையில் இவர்கள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அனைவரும் கறுப்பு பொருளாதாரத்தின் பங்குதாரர்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உழைக்கும் வருமானத்தில் இவர்கள் வரி செலுத்தியதில்லை என திலித் ஜயவீர, ஏனைய வேட்பாளர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...