24 66c96bb4a6735
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த பணமின்றி தவிக்கும் தேர்தல் ஆணைக்குழு

Share

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த பணமின்றி தவிக்கும் தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு பணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க(Ratnayake) தெரிவித்தார்.

இந்த வாரம் தேர்தல் ஆணைக் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முடிவு குறித்து முதலில் கலந்துரையாடப்படும் என்று நம்புகிறோம் என்றார்.

இதன்படி உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேலதிக தீர்மானங்கள் எடுக்கப்படும் என தலைவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு (2023) உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தாமதமானதால், தேர்தலுக்காகச் செலவழிக்கப்பட்ட பணம் தவிர மற்ற அனைத்தும் திறைசேரிக்கு திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணம் பெறுவது தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடவுள்ளதாக தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த விவகாரங்கள் அனைத்திலும் நுழைவதற்கு முன், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விடயங்களை ஆணையம் கலந்துரையாட வேண்டும் என்று அவர் கூறினார்.

கடந்த வருடம் (2023) மார்ச் 09 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் அரசாங்க அச்சகத்தினால் வாக்குச் சீட்டுகளின் ஒரு பகுதி அச்சிடப்பட்டு கையிருப்பு வைக்கப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது. அச்சிடப்படாத வாக்குச் சீட்டுகளின் மீதி தொகையை அச்சிட முடியும் என்றும் தலைவர் தெரிவித்தார்.எவ்வாறாயினும், இது தொடர்பில் இதுவரை எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்மொழியப்பட்ட வேட்பாளர்களில் சிலர் நாட்டை விட்டு வெளியேறியமை, சிலர் உயிரிழந்துள்ளமை, சிலர் அரசியலை கைவிட்டமை தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

புதிய வேட்புமனுக்களை கோருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் ஆலோசனை நடத்துவது மற்றும் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. புதிய வேட்புமனுக்கள் கோரப்பட்டால், நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...