13 20
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் பாரிய கலவரம் வெடிக்க காரணமான ஆசிய நாட்டவர் கைது

Share

பிரித்தானியாவில் பாரிய கலவரம் வெடிக்க காரணமான ஆசிய நாட்டவர் கைது

பிரித்தானியா(United Kingdom) முழுக்க கலவரம் வெடிக்க காரணமான தவறான தகவல்களை பரப்பியதற்காக ஆசிய நாட்டவர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பாகிஸ்தான் நாட்டவர் என்பதும் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது லாகூர் நகரின் கிழக்கே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது செய்தி நிறுவனம் ஒன்றின் சமூக ஊடக பக்கத்தில் குறித்த நபர் தவறான தகவல்களை பதிவிட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது சவுத்போர்ட்(Southport) தாக்குதல்தாரி ஒரு புகலிடக் கோரிக்கையாளர் என்றும், மிக சமீபத்தில் சிறு படகு மூலமாக அவர் பிரித்தானியாவில் நுழைந்துள்ளார் என்றும் தகவல் பரப்பப்பட்டது.

இந்நிலையில் Channel3 Now என்ற செய்தி நிறுவனம் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவில் இருந்து இணையமூடாக செயல்பட்டு வருகிறது.

அந்த செய்தி நிறுவனம் வெளியிட்ட தவறான தகவல்கள் சமூக ஊடகத்தில் தீயாக பரவ, அடுத்த சில மணி நேரங்களில் வலதுசாரிகள் தங்கள் சமூக ஊடக குழுக்களில் அதை பகிர்ந்துள்ளதும், அடுத்த நாள் கலவரம் வெடிக்க அது காரணமாக அமைந்துள்ளது.

இதனையடுத்து விளக்கமளித்த பொலிஸார், தாக்குதல்தாரி பிரித்தானியர் என்றும், அவர் வேறு சமூகத்தை சார்ந்தவர் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, Channel3 Now செய்தி ஊடகத்தின் முதன்மை நிர்வாகி ஒருவர், தவறான தகவலை வெளியிட்டடற்கு மன்னிப்புக் கோரியுள்ளதுடன், விளக்கமும் அளித்திருந்தார்.

இருப்பினும், Channel3 Now வெளியிட்ட தவறான தகவல் காரணமாக பிரித்தானியா முழுவதும் ஒரு வார காலம் கலவரம் நீடித்ததுடன், கைதானவர்கள் எண்ணிக்கை 1000 கடந்தது.

மேலும், தீவிர வலதுசாரிகள் காரணமாகவே நாடு ஸ்தம்பித்தது என்றும் அதிகாரிகள் தரப்பில் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...