11 19
உலகம்செய்திகள்

காசா பாடசாலை மீது இஸ்ரேல் சரமாரி குண்டு தாக்குதல் : 12 பேர் உயிரிழப்பு

Share

காசா பாடசாலை மீது இஸ்ரேல் சரமாரி குண்டு தாக்குதல் : 12 பேர் உயிரிழப்பு

காசாவில் தற்காலிக குடியிருப்பாக மாற்றப்பட்ட பாடசாலை மீது நேற்று(20)இஸ்ரேலிய இராணுவம் ரொக்கெட் தாக்குதல் நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மஹ்மூத் பஸ்சல்(Mahmud Bassal) வழங்கிய தகவலில், காசா நகரின் மேற்கே இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து குண்டு வீசி தாக்கப்பட்ட முஸ்தபா ஹபீஸ் பாடசாலையில்(Mustafa Hafiz school) இருந்து 12 பேரின் உடல்களை எடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

காசாவில் நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில், ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஹமாஸ் படைகளின் உத்தரவு மற்றும் கட்டுப்பாட்டு மையமாக செயல்பட்டு இஸ்ரேலிய படைகளுக்கு ஏதிரான தாக்குதலை முன்னெடுப்பதால் பாடசாலை குறிவைத்து தாக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் விளக்கம் தெரிவித்துள்ளது.

மேலும், பாடசாலையில் இருந்து கொண்டு செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் மீது இதன்மூலம் துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.

பாடசாலையின் இரண்டாவது தளத்தின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் படுகாயமடைந்ததாகவும் மஹ்மூத் பஸ்சல் முன்னதாக வழங்கிய தகவலில் தெரிவித்து இருந்தார்.

உயிரிப்புகளில் சரியான எண்ணிக்கை இன்னும் சரிபார்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...