3 36 scaled
இலங்கை

ஜனாதிபதி வேட்பாளர்கள் வெளியிடும் அறிக்கைகள்: கவனம் செலுத்தியுள்ள ஐஎம்எப்

Share

ஜனாதிபதி வேட்பாளர்கள் வெளியிடும் அறிக்கைகள்: கவனம் செலுத்தியுள்ள ஐஎம்எப்

இலங்கை அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் மேடைகளில் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் (IMF) கவனம் செலுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) தலைமையில், இலங்கையை கண்காணிக்கும் கண்காணிப்புக் குழுவொன்று இந்த நாட்களில் இலங்கை வந்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட கண்காணிப்புக் குழு இந்த அறிக்கைகளை ஆராய்ந்து வருகிறது.

இலங்கையுடனான உடன்படிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் மனிதாபிமானப் பணியை வழங்கும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் கருத்துப்படி, சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடனான ஒப்பந்தத்தை மாற்றினால், அதன் நான்காவது தவணையை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்க இன்னும் ஒரு வருடம் ஆகும்.

இந்த வருடம் நவம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த நான்காவது தவணை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை தாமதிக்கப்படும் எனவும் நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கடந்த 19 ஆம் திகதி இரவு கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த இந்தக் கண்காணிப்புக் குழு, இந்த வாரத்திற்குள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை...

world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...