3 36 scaled
இலங்கை

ஜனாதிபதி வேட்பாளர்கள் வெளியிடும் அறிக்கைகள்: கவனம் செலுத்தியுள்ள ஐஎம்எப்

Share

ஜனாதிபதி வேட்பாளர்கள் வெளியிடும் அறிக்கைகள்: கவனம் செலுத்தியுள்ள ஐஎம்எப்

இலங்கை அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் மேடைகளில் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் (IMF) கவனம் செலுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) தலைமையில், இலங்கையை கண்காணிக்கும் கண்காணிப்புக் குழுவொன்று இந்த நாட்களில் இலங்கை வந்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட கண்காணிப்புக் குழு இந்த அறிக்கைகளை ஆராய்ந்து வருகிறது.

இலங்கையுடனான உடன்படிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் மனிதாபிமானப் பணியை வழங்கும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் கருத்துப்படி, சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடனான ஒப்பந்தத்தை மாற்றினால், அதன் நான்காவது தவணையை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்க இன்னும் ஒரு வருடம் ஆகும்.

இந்த வருடம் நவம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த நான்காவது தவணை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை தாமதிக்கப்படும் எனவும் நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கடந்த 19 ஆம் திகதி இரவு கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த இந்தக் கண்காணிப்புக் குழு, இந்த வாரத்திற்குள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...