1 34
உலகம்செய்திகள்

உக்ரைனை ஆக்கிரமித்து வரும் ரஷ்யா: உடன் வெளியேறுமாறு மக்களுக்கு உத்தரவு

Share

உக்ரைனை ஆக்கிரமித்து வரும் ரஷ்யா: உடன் வெளியேறுமாறு மக்களுக்கு உத்தரவு

உக்ரைனின் (Ukraine) முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை (Pokrovsk) ரஷ்ய (Russia) படைகள் ஆக்கிரமித்து வருகின்ற நிலையில் அங்குள்ள மக்களை உக்ரைன் உடனடியாக நகரைவிட்டு வெளியேற்றி வருகின்றது.

இந்நிலையில், மக்கள் அந்நகரை விட்டு வெளியேறும் மிக பரிதாபகரமான காட்சிகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

சுமார் 53,000 பேர் வசித்து வரும் குறித்த பகுதியில் ரஷ்ய படைகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக உக்ரைன் பாரிய சிக்கலை எதிர்நோக்கி வருகின்றது.

முன்னதாக, ரஷ்யாவின் குர்ஸ்க் (Russia – Kursk) பிராந்தியத்தில் உள்ள ஒரு முக்கியமான பாலத்தின் மீது உக்ரைன் (Ukraine) தாக்குதல் மேற்கொண்டது.

குறித்த பாலத்தின் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது அமெரிக்காவிடம் (US) பெற்றுக்கொண்ட ஹிமார்ஸ் (HIMARS) ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இருப்பினும், ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், தற்போது உக்ரைனின் முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளன.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...