23 10
உலகம்செய்திகள்

மசகு எண்ணெய் இறக்குமதி: பல மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்த அரசாங்கம்

Share

மசகு எண்ணெய் இறக்குமதி: பல மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்த அரசாங்கம்

தவறான முன்கூட்டிய கணிப்பு காரணமாக மசகு எண்ணெய் இறக்குமதியில் அரசாங்கம் பல மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் நட்டத்தை சந்தித்துள்ளது.

வர்த்தக புலனாய்வுப்பிரிவாக நிறுவப்பட்ட எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளின் தவறான கணிப்பால் இவ்வாறு நட்டம் ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயரும் என அதிகாரிகள் கூறிய தவறான கணிப்பால் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஜூலை மாதம் 83.93 டொலராக இருந்த மசகு எண்ணெய் விலை ஆகஸ்ட் மாதத்தில் பீப்பாய்களுக்கு 82.52 டொலராக குறைந்துள்ளது.

இதனால் ஆகஸ்ட் மாதம் மசகு எண்ணெய் விலை உயரும் என வெளியான தவறான அறிக்கையுடன் கச்சா எண்ணெய் கப்பலை அனுப்பியதால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த தகவல்களின் அடிப்படையில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருந்த நிலையில் திடீரென மசகு எண்ணெய் கப்பல் ஒன்றும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...