17 13
இலங்கை

17 மாணவர்களால் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! அதிபர், ஆசிரியர்கள் அதிரடியாக கைது

Share

17 மாணவர்களால் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! அதிபர், ஆசிரியர்கள் அதிரடியாக கைது

தனமல்வில பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான செயலுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி தவறான செயலுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பிலான தகவல்களை அறிந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்த காரணத்திற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாடசாலை மாணவியை தவறான செயலுக்கு உட்படுத்தியமை தொடர்பில் 14 மாணவர்களை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் நேற்று முன்தினம் (12) உத்தரவிட்டது.

மேலும், மூன்று மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய பெண்ணை ஆகஸ்ட் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெல்லவாய நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தனமல்வில பிரதேச பாடசாலையொன்றில் கல்வி பயின்ற பாடசாலை மாணவியை தவறான செயலுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 17 மாணவர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தவறான செயலுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட போது, ​​அங்கிருந்த வைத்தியர் ஒருவர் சிறுமியை மேலும் கொடுமைப்படுத்தியதாக அவரது தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்படி, சிறுமியின் தாய் ஹம்பாந்தோட்டை பொலிஸ் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share
தொடர்புடையது
18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...

17 3
இலங்கைசெய்திகள்

மோசடி வழக்கு: பிரதியமைச்சர் – மாநகர முதல்வரிடம் பெறப்படவுள்ள வாக்குமூலம்

மோசடி வழக்கு தொடர்பாக, தொழில்துறை பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கடுவெல...

15 2
இலங்கைசெய்திகள்

தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டால் வவுனியா வடக்கு தேசிய மக்கள் சக்தியிடம் பறி போகும் அபாயம்

தமிழரசுக் கட்சியின்(ITAK) செயற்பாட்டால் வவுனியா வடக்கு பிரதேச சபை தேசிய மக்கள் சக்தியிடம் பறிபோகும் அபாய...

14 2
இலங்கைசெய்திகள்

செம்மணி அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு கோரும் சாணக்கியன்

செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் நாளைய தினம் மட்டக்களப்பில் மாபெரும்...