12 12
இலங்கை

இலங்கையில் இருந்து தங்கக் கடத்தல் : தொடர் கண்காணிப்பின் கீழ் பறிமுதல்

Share

இலங்கையில் இருந்து தங்கக் கடத்தல் : தொடர் கண்காணிப்பின் கீழ் பறிமுதல்

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் சுமார் 6.6 கிலோ தங்கம் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த தங்கத்தின் மதிப்பு 4.5 கோடி இந்திய ரூபாய்களாகும்.

வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் இந்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து கடல் வழியாக இந்த தங்கம் தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முன்னதாக, இலங்கையில் இருந்து தமிழகத்தின் தனுஸ்கோடிக்கு தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அதிகாரிகள் மண்டபம், வெத்தலை, களிமண்குண்டு, மரைக்காயர்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இருப்பினும், கடத்தல்காரர்கள் ஏற்கனவே கரையை அடைந்துவிட்ட நிலையில், சாலை வழியாக குறித்த தங்கம், மதுரைக்கு எடுத்துச்செல்லப்படுவதை அதிகாரிகள் அறிந்தனர்.

இதனையடுத்தே தங்கம் எடுத்துச்செல்லப்பட்ட வாகனத்தை திருப்பாச்சேத்தி கட்டணம் செலுத்தும் இடத்துக்கு அருகில் வைத்து நிறுத்தினர்.

இதன்போது கீழக்கரையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

Share
தொடர்புடையது
world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை...

world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...