tamilni 4 scaled
உலகம்

சொன்னதே நடந்தது… பாரீஸ் ஒலிம்பிக்ஸ் உட்பட பல சம்பவங்களை பட்டியலிட்ட வாழும் நாஸ்ட்ராடாமஸ்

Share

சொன்னதே நடந்தது… பாரீஸ் ஒலிம்பிக்ஸ் உட்பட பல சம்பவங்களை பட்டியலிட்ட வாழும் நாஸ்ட்ராடாமஸ்

வாழும் நாஸ்ட்ராடாமஸ் என பரவலாக அறியப்படும் பிரேசில் நாட்டின் ஜோதிடர் ஒருவர் இந்த ஆண்டில் இதுவரை தாம் கணித்துள்ளதில் 6 சம்பவங்கள் நடந்தேறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உலகம் இணையப் போரின் விளிம்பில் தத்தளிப்பதாக எழுந்துள்ள அச்சங்களுக்கு மத்தியில், தாம் இதுவரை சொன்னதே நடந்துள்ளது என வாழும் நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டுள்ளார்.

2024ல் உலகம் மூன்று நாட்கள் இருளில் மூழ்கும் என்றார் வாழும் நாஸ்ட்ராடாமஸ். பலர் ஏளனம் செய்து புறக்கணிக்க, உலகம் மொத்தம் குழப்பத்தை ஏற்படுத்திய மிகப்பெரிய மைக்ரோசாப்ட் செயலிழப்பு நடந்தேறியது.

இதனால் மூன்று நாட்களுக்கு மேல் செய்தி ஊடக நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், பெரும் வணிக வளாகங்கள் என மொத்தமும் ஸ்தம்பித்தது.

தற்போது வரையில் மைக்ரோசாப்ட் செயலிழப்பு மீளவில்லை என்றே கூறப்படுகிறது. Athos Salomé என்ற வாழும் நாஸ்ட்ராடாமஸ் தான் கோவிட் பெருந்தொற்று தொடர்பில் முதல் முறையாக உலகை எச்சரித்தவர்.

எலோன் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவார் என்றும் இவர் கணித்திருந்தார். கத்தார் கால்பந்து உலகக் கிண்ணம் முதல் யூரோ கிண்ணம் யார் வெல்வார் என்பதுடன், ராணியார் இரண்டாம் எலிசபெத் மரணம் கூட இவர் கணித்தது போன்றே நிறைவேறியது.

தற்போது பாரீஸ் ஒலிம்பிக் குளறுபடிகள் உட்பட தமது மேலும் 5 கணிப்புகள் உறுதியாகியுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் தென் கொரியாவின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் மீது வடகொரியா தாக்குதல் முன்னெடுத்துள்ளதும் அவர்களின் VPN மென்பொருளில் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வெளியான தகவல் தாம் ஏற்கனவே கணித்துள்ளதாக வாழும் நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொன்று Safari, Chrome மற்றும் Firefox போன்ற இணைய உலாவிகள் தாக்குதலுக்கு இலக்காகலாம் என எச்சரித்திருந்தார். மூன்றாவதாக கிரிப்டோகரன்சி நிறுவனங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் குறித்து அவர் எச்சரித்திருந்தார்.

சமீபத்தில் தான் இந்தியாவின் wazirx கிரிப்டோகரன்சி நிறுவனம் இணைய தாக்குதலுக்கு இலக்காகி சுமார் 230 மில்லியன் டொலர் மதிப்பிலான இழப்பை எதிர்கொண்டுள்ளது. இதன் பின்னணியில் யார் என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை.

பாரீஸ் ஒலிம்பிக் தொடர்புடைய இணைய அமைப்புகள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் இதுவென்றே Athos Salomé தெரிவித்துள்ளார்.

மேலும், பிரான்ஸ் நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு, இணைய பாதுகாப்பை பலப்படுத்தியதால் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

Share
தொடர்புடையது
image 1200x800 35 1
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் ஆவணங்கள்: பிரான்ஸ் பிரபலங்கள் மீது பாயும் விசாரணை! – சிறப்புப் புலனாய்வுக் குழு அதிரடி நியமனம்!

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட 30 லட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் கோப்புகளில், பிரான்ஸ் நாட்டின் அரசியல்...

image 1200x800 31 1
செய்திகள்உலகம்

எப்ஸ்டீனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை! – அதிர்ச்சித் தகவல்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் அதிரடி விளக்கம்!

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான 35 லட்சம் பக்கங்கள் கொண்ட இரகசியக் கோப்புகளை அமெரிக்க...

image 1200x800 36 1
செய்திகள்உலகம்

மலையுச்சியில் காதலியைப் பலிகொடுத்த வீரர்? – ஆஸ்திரியாவில் பரபரப்பான அலட்சியக் கொலை வழக்கு விசாரணை!

ஆஸ்திரியாவின் மிக உயர்ந்த சிகரமான கிராஸ்க்லோக்னரில் (Grossglockner – 3,798 மீட்டர்) கடந்த ஆண்டு ஜனவரி...

image 1200x800 37 1
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கில் போர் மேகம்: ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் கடைசி எச்சரிக்கை! – போர்க்கப்பலை அனுப்பியது அமெரிக்கா!

ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்...