10 12
இலங்கைசெய்திகள்

தேங்காய் எண்ணெய் விற்பனையில் மற்றுமொரு மோசடி

Share

தேங்காய் எண்ணெய் விற்பனையில் மற்றுமொரு மோசடி

தேங்காய் எண்ணெய் நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக கூறி பாம் எண்ணெய் இறக்குமதி செய்ய கைத்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றி இந்த பாம் எண்ணெய் கையிருப்பு இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும், இவை சந்தைக்கு விடப்பட்டதன் பின்னர், தேங்காய் எண்ணெயில் கலந்து விற்பனை செய்யும் மோசடி இடம்பெறும் அபாயம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாம் எண்ணெய்யை பெருமளவில் இறக்குமதி செய்தால், நாட்டில் உள்ள தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் உள்ளூர் தேங்காய் எண்ணெய் தொழிற்சாலைகளை பராமரிக்க முடியாது கடும் நெருக்கடி ஏற்படும் என்றும் கூறப்படுகின்றது.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 3,849 மெற்றிக் தொன் எண்ணெய் கைத்தொழில் அமைச்சின் அனுமதியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியினை பெறவில்லை என்றும் கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...