2 19
உலகம்செய்திகள்

நெதர்லாந்தில் வெற்றிடமாக மாறும் சிறைச்சாலைகள்

Share

நெதர்லாந்தில் வெற்றிடமாக மாறும் சிறைச்சாலைகள்

குற்றவாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளமை காரணமாக நெதர்லாந்தின் சிறைச்சாலைகள் வெற்றிடமாக மாறும் நிலை உருவாகியுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பல நாடுகளில் சிறைச்சாலைகள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், நெதர்லாந்து நாட்டில் இவ்வாறான வித்தியாசமான சூழ்நிலை தோன்றியுள்ளது.

தற்போது, நெதர்லாந்து நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

கடந்த ஆண்டு 19 சிறைச்சாலைகள் நெதர்லாந்து அரசாங்கத்தினால் மூடப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு பல சிறைச்சாலைகள் மூடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தண்டனையை விட மறுவாழ்வு அளிப்பதில் அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவது இதற்கான காரணமாக கூறப்படுகின்றது.

இந்த முயற்சியின் பலனாக அந்நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளன.

இதேவேளை, போதுமான கைதிகள் இல்லாமல் சிறை உட்கட்டமைப்பை பராமரிக்கும் செலவு உயர்ந்துள்ளதால் ஒரு புதிய சவாலுக்கு நெதர்லாந்து முகங்கொடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...