24 66b76cab995f4
இலங்கைசெய்திகள்

அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை மாணவர்களுக்கு முக்கிய தகவல்

Share

அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை மாணவர்களுக்கு முக்கிய தகவல்

அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழக கல்விக்காக செல்லும் இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை 40 வீதமாக மட்டுப்படுத்தப்படும் என்ற தகவலை கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் நிராகரித்துள்ளார்.

சமகால தொழிற்கட்சி அரசாங்கம் அவ்வாறான கலந்துரையாடல்கள் எதனையும் நடத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் எதிர்காலத்தில் உயர்கல்வியின் தரம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022-2023ஆம் நிதியாண்டில் 528,000 ஆக இருந்த அவுஸ்திரேலியாவின் மொத்த குடியேற்றத்தின் எண்ணிக்கை 2024-2025 ஆம் ஆண்டில் 260,000 ஆக குறைக்கப்படும் என்று கடந்த மாதம் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

அதற்கமைய, உயர்கல்விக்கு வரும் மாணவர்களுக்கு மாணவர் விசா கட்டணத்தை உயர்த்துதல், வங்கி இருப்பு தொகையை உயர்த்துதல், ஆங்கில மொழித் திறனை அதிக அளவில் பேணுதல் போன்ற பல கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.

எனினும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் வலியுறுத்துகிறார்.

அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு வருமானத்தில் உயர்கல்வி நான்காவது இடத்தில் உள்ளதால், இது தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளை கவனமாக பரிசீலிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...