26 1
உலகம்செய்திகள்

ஆப்பிரிக்க நாடொன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 பேர் பலி! மேலும் உயரும் என அறிவிப்பு

Share

ஆப்பிரிக்க நாடொன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 பேர் பலி! மேலும் உயரும் என அறிவிப்பு

எத்தியோப்பியாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 பேர் உயிரிழந்தனர்.

தெற்கு எத்தியோப்பியாவின் வோலைட்டா பகுதியில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் இறப்பு எண்ணிக்கை உயரும் என்றும் உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட Kindo Didaye மாவட்டத்தில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், கணக்கில் வராதவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை என்றும் தலைமை நிர்வாகி Samuel Fola கூறினார்.

பாரிய நிலச்சரிவை எதிர்நோக்குகிறோம்
மேலும் அவர் கூறுகையில், “இறந்தவர்களில் குழந்தைகளும் உள்ளனர். நாங்கள் இப்போது முன்னெச்சரிக்கையாக 300க்கும் மேற்பட்டோர்களை வெளியேற்றியுள்ளோம் மற்றும் மற்றொரு பாரிய நிலச்சரிவை எதிர்நோக்குகிறோம்” என்றார்.

இந்த நிலையில் பிராந்திய அரசாங்கத்தின் கூற்றுப்படி, Wolaita பகுதியில் வேகமாக மீட்பு முயற்சி நடந்து வருகிறது.

முன்னதாக, கடந்த மாதம் எத்தியோப்பியாவின் மற்றொரு பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவுக்கு பலியாகினர்.

எத்தியோப்பியாவில் மழைக்காலத்தில் நிலச்சரிவுகள் பொதுவானவை மற்றும் இது சூலையில் தொடங்கி செப்டம்பர் நடுப்பகுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...