26 1
உலகம்செய்திகள்

ஆப்பிரிக்க நாடொன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 பேர் பலி! மேலும் உயரும் என அறிவிப்பு

Share

ஆப்பிரிக்க நாடொன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 பேர் பலி! மேலும் உயரும் என அறிவிப்பு

எத்தியோப்பியாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 பேர் உயிரிழந்தனர்.

தெற்கு எத்தியோப்பியாவின் வோலைட்டா பகுதியில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் இறப்பு எண்ணிக்கை உயரும் என்றும் உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட Kindo Didaye மாவட்டத்தில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், கணக்கில் வராதவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை என்றும் தலைமை நிர்வாகி Samuel Fola கூறினார்.

பாரிய நிலச்சரிவை எதிர்நோக்குகிறோம்
மேலும் அவர் கூறுகையில், “இறந்தவர்களில் குழந்தைகளும் உள்ளனர். நாங்கள் இப்போது முன்னெச்சரிக்கையாக 300க்கும் மேற்பட்டோர்களை வெளியேற்றியுள்ளோம் மற்றும் மற்றொரு பாரிய நிலச்சரிவை எதிர்நோக்குகிறோம்” என்றார்.

இந்த நிலையில் பிராந்திய அரசாங்கத்தின் கூற்றுப்படி, Wolaita பகுதியில் வேகமாக மீட்பு முயற்சி நடந்து வருகிறது.

முன்னதாக, கடந்த மாதம் எத்தியோப்பியாவின் மற்றொரு பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவுக்கு பலியாகினர்.

எத்தியோப்பியாவில் மழைக்காலத்தில் நிலச்சரிவுகள் பொதுவானவை மற்றும் இது சூலையில் தொடங்கி செப்டம்பர் நடுப்பகுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...