6 7
இலங்கைசெய்திகள்

ரணிலுடன் இணைந்தவர்கள் மீண்டும் வருவார்கள் : மொட்டுக்கட்சி பகிரங்கம்

Share

ரணிலுடன் இணைந்தவர்கள் மீண்டும் வருவார்கள் : மொட்டுக்கட்சி பகிரங்கம்

ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில், கைகளை உயர்த்தியப்படி மீண்டும் வருவார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார்.

தற்போதைய தீர்மானம் எடுத்தவர்களுக்கு நல்ல அரசியல் பாடம் புகட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்காளர்களும் மகிந்த ராஜபக்சவுடன் இருப்பதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

வெற்றி வேட்பாளரை முன்வைக்கும் ஒரே அரசியல் கட்சியாக பொதுஜன பெரமுன இருக்கும். அந்த வேட்பாளரின் அறிவிப்பு நாளை (7) வெளியிடப்படும்.

ஏனைய கட்சிகள் முன்வைத்த, அனைத்து வேட்பாளர்களும் பழையவர்கள் மற்றும் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் என்றும் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச திரைக்குப் பின்னால் இருந்து அனைத்தையும் கட்டுப்படுத்தும் நபர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...