5 6
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்ச குடும்பத்திற்குள் வெடித்தது மோதல்: ரணிலுக்கு பெருகும் ஆதரவு

Share

ராஜபக்ச குடும்பத்திற்குள் வெடித்தது மோதல்: ரணிலுக்கு பெருகும் ஆதரவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அழித்தது போன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ச குடும்பத்தையும் அழித்துள்ளார் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ராஜபக்ச குடும்பத்திற்குள் பல்வேறு மோதல்கள் வெடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பசில் ராஜபக்சவும் நாமல் ராஜபக்சவும் ஒரே பக்கம் இருப்பதாகவும், யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ராஜபக்ச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் தயாராக இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தற்போது ராஜபக்சவின் வருகை பொருத்தமானதல்ல, எனவே சுதந்திரமாக செயற்படுமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...