28
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு

Share

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்த பின்னர் அனைத்து வேட்பாளர்களுக்கும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த குழு திட்டமிட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொலிஸ் மா அதிபர் தொடர்பான பிரச்சினை காரணமாக ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் மா அதிபரின் அனைத்து அதிகாரங்களையும் செயலாளர் வியானி குணதிலக்கவிடம் பொது பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளரும் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

அதன்படி தேர்தல் காலத்தில் பொலிஸ் மா அதிபர் பிறப்பிக்கும் உத்தரவுகள், தேர்தல் கடமைகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துதல், கூட்டங்களை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்தல், போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், தேவையான பணம் செலுத்துதல் போன்றவை செயலாளரால் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
24 669df6417f6df
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர சுமார்...

images 3 3
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக பெண் சட்டத்தரணி கைது

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு மூளையாகச் செயற்பட்டதாகக் கருதப்படும் இஷாரா...

images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...