20 3
உலகம்செய்திகள்

உக்ரைன் நடத்திய தாக்குதலில் நீரில் மூழ்கிய ரஷ்யாவின் பலம் வாய்ந்த ஆயுதம்

Share

உக்ரைன் நடத்திய தாக்குதலில் நீரில் மூழ்கிய ரஷ்யாவின் பலம் வாய்ந்த ஆயுதம்

கிரிமியன் தீபகற்பத்தில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஷ்ய நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழித்து இருப்பதாக உக்ரைனிய இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், சனிக்கிழமை Sevastopol துறைமுக நகரில் ரஷ்யாவின் நீர்மூழ்கி கப்பலானது ஏவுகணையால் தாக்கப்பட்ட பிறகு நீரில் மூழ்கியதாக தெரிவித்துள்ளது.

மேலும், தீபகற்பத்தை பாதுகாப்பில் வைத்து இருந்த நான்கு S-400 வான் தடுப்பு சாதனங்களையும் தாக்குதலில் அழித்ததாக உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கு ரஷ்யா பதிலளிக்கவில்லை, ரோஸ்டோவ்-ஆன்-டான்(Rostov-on-Don) என்ற kilo-class தாக்குதல் வகை நீர்மூழ்கி கப்பலானது 2014ஆம் ஆண்டு ஏவப்பட்டது.

அத்துடன் ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில் கலிபர் கப்பல் ஏவுகணைகளை ஏவக்கூடிய நான்கு நீர்மூழ்கி கப்பல்களில் இதுவும் ஒன்றாகும் என குறிப்பிட்டுள்ளது.

எனினும் உக்ரைனின் இந்த அறிவிப்புகளுக்கு ரஷ்யா இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...