6 2 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள பெருந்தொகை டொலர் வருமானம்: மத்திய வங்கி தகவல்

Share

இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள பெருந்தொகை டொலர் வருமானம்: மத்திய வங்கி தகவல்

இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 1,557 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக  இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது ஏறக்குறைய இரண்டு மடங்கு வளர்ச்சி என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானம் தவிர்ந்த 1,762 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சேவைத் துறைக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில் வெளிநாட்டு ஊழியர்களின் பணம் 3,144 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் வெளிநாட்டு ஊழியர்களின் பணம் 2,823 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஜூன் மாதம் இறுதிக்குள், நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 5.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியும் ஜூன் மாதம் வரையில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...