13 1
இலங்கைசெய்திகள்

ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலம் தொடர்பில் வெளியான தகவல்

Share

ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலம் தொடர்பில் வெளியான தகவல்

ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலம் ஈரான் நாட்டு உயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனி (Ayatollah Ali Khamenei) தலைமையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,445 என ஹமாஸ் நடத்தும் பிராந்தியத்தின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் மீது ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், இஸ்மாயில் ஹனியேயின் உடல் தோஹாவில் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, அவரின் இறுதி ஊர்வலம் ஈரான் தலைவர் அயத்துல்லாவின் தலைமையில் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெஹ்ரான் தாக்குதல் குறித்து இஸ்ரேல் கருத்து தெரிவிக்க மறுத்த நிலையில், ”ஈரான் எனும் இஸ்லாமிய குடியரசின் பிரதேசத்தில், தியாகியாகிய இஸ்மாயில் ஹனியேயின் இரத்தத்திற்கு பழிவாங்குவது எங்கள் கடமை” என ஈரான் நாட்டு தலைவர் அயதுல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த புதன்கிழமை அதிகாலை முதல் ஹனியேவின் படுகொலையைக் கண்டித்து மக்கள் பலர், ஈரான் முழுவதும் உள்ள நகரங்களில் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தெஹ்ரானின் பாலஸ்தீன சதுக்கத்தில் கூடிய நூற்றுக்கும் மேற்பட்டோர், ”இஸ்ரேலுக்கு மரணம், அமெரிக்காவுக்கு மரணம்” என எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...