8 1
இலங்கைசெய்திகள்

படகு விபத்திலிருந்து மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த இந்திய அதிகாரி

Share

படகு விபத்திலிருந்து மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த இந்திய அதிகாரி

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பகுதியில் இலங்கை கடற்படை படகுடன் மோதியபோது கவிழ்ந்த படகில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு கடற்றொழிலாளர்களை, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சந்தித்துள்ளனர்.

இதன்போது அவர்களின் நலம் குறித்து விசாரித்த, இந்திய தூதரக அதிகாரி சாய் முரளி அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

அத்துடன் அவர்களின் நலனை உறுதி செய்வதற்காக இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பங்களுக்கு தொலைபேசி அழைப்புகளையும் தூதரக அதிகாரிகள் ஏற்படுத்திக்கொடுத்தனர்.

முன்னதாக, கச்சத்தீவுக்கு வடக்கே 5 கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்படை கப்பல் ஒன்றும் இந்திய மீன்பிடி படகு ஒன்றும் நேற்று வியாழக்கிழமை மோதி விபத்துக்குள்ளாகின.

இதன்போது கப்பலில் இருந்த நான்கு இந்தியர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காணாமல் போயுள்ளதுடன், இரண்டு பேர் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

Share
தொடர்புடையது
23858849 newproject 2025 12 28t112541304
செய்திகள்உலகம்

இனி வீட்டு வேலைகளுக்கு ‘ஹுமாயுனோய்டு’ ரோபோக்கள்: சிலிக்கான் வேலியில் தீவிரமடையும் தயாரிப்புப் பணிகள்!

வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்வதற்கான மனித ரொபோக்களை தயாரிக்கும் பணிகள் அமெரிக்காவின் சிலிக்கன் வெலி தொழில்நுட்ப...

24632725 china
செய்திகள்உலகம்

சீனாவில் களைகட்டிய உலக இந்தி தினம்: ஷாங்காய் இந்தியத் தூதரகத்தில் மாணவர்கள் உற்சாகப் பங்கேற்பு!

உலக இந்தி தினத்தை முன்னிட்டு சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் விசேட கொண்டாட்டங்கள்...

kalvi L 260112092401000000
செய்திகள்உலகம்

தட்சசீலத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான குஷான கால நாணயங்கள் கண்டெடுப்பு: உலகளாவிய வணிக மையம் என்பது உறுதி!

பாகிஸ்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க தட்சசீலம் (Taxila) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், 2,000 ஆண்டுகள் பழமையான குஷானப்...

26 69631f5fb34d5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தீவிரமடையும் வைரஸ் காய்ச்சல்: கொழும்பில் சிக்குன்குனியா; நாடு முழுவதும் டெங்கு அச்சம்!

இலங்கையில் தற்போது பல்வேறு வகையான வைரஸ் நோய்கள் வேகமாகப் பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின்...