11 17
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிவிப்பு

Share

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிவிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால், இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் எமது ஊடகப்பிரிவு இலங்கை பெட்ரோலி கூட்டுதாபனத்திடம் உயர் அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு கேட்ட போது, விலை திறுத்தம் தொடர்பில் இது வரையில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளின் உண்மைத்தன்மை தொடர்பில் இன்று நள்ளிரவுக்குள் உறுதிப்படுத்தப்படும் எனவும் கூறினார்.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலைகள் திருத்தப்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யாத காரணத்தினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

இந்நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தியதன் காரணமாகவே விலை திருத்தம் தொடர்பில் மேற்படி தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சந்தையில், ஜூலை 1 ஆம் திகதி வரை 82.38 டொலராக பதிவு செய்யப்பட்ட W.T.I. கச்சா எண்ளை நேற்று 75.30 டொலராக குறைந்துள்ளது.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...