24 66a79f4a0e23c
இலங்கை

மலேசியாவில் தமிழர்களின் வரலாறு மற்றும் எண்ணிக்கை

Share

மலேசியாவில் தமிழர்களின் வரலாறு மற்றும் எண்ணிக்கை

ஆசிய நாடான மலேசியாவில் தமிழர்கள் வரலாறு குறித்து இங்கே காண்போம். தமிழர்கள் அதிக வசிக்கும் நாடுகளில் ஒன்றாக மலேசியா விளங்குகிறது.

மலேசியாவின் மொத்த மக்கள் தொகை 3.39 கோடி (2022) ஆகும். இதில் தமிழர்கள் 6.7 சதவீதம் பேர் ஆவர். அதாவது 23, 27,000 தமிழர்கள் மலேசியாவில் வசித்து வருகின்றனர்.

1800களில் மலேசியாவிற்கு தொழிலாளர்களின் பாரிய இயக்கத்திற்கு முன், அங்கு இந்திய குடியேற்றங்கள் பெரும்பாலும் வணிகத்தை கொண்டிருந்தன.

குறிப்பாக, காலனித்துவ ஆட்சியின்போது தமிழ்த் தொழிலாளர்கள் பாரிய அளவில் இடம்பெயர்ந்தனர். ஆரம்பத்தில் தமிழர்கள் சாலைகள், ரயில் பாதைகள் அல்லது தேயிலை தோட்டங்களில் வேலை பார்க்க வரவழைக்கப்பட்டனர். பின்னாளில் படிப்படியாக அவர்கள் நிரந்தர குடியேறிகளாக மாறினர்.

அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களின் கொள்கையால் தமிழ்நாட்டு கிராமம் மலாயாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மலாயாவிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் தமிழ் பேசும் மக்களே ஆவர்.

எனினும், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பல்கலைக்கழக கல்வியறிவு பெற்றவர்களாக இந்தியர்கள் வந்தனர்.

இன்று மலேசிய தமிழர்கள் சமூகங்களும் பெருமையுடன் தங்கள் பாரம்பரிய பழக்கவழக்கங்கள், மொழி மற்றும் மதங்களைப் பின்பற்றுகின்றனர்.

தமிழர்கள் மலேசியாவின் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வாழ்கின்றனர். பெரும்பாலானோர் உடல் உழைப்பு தொழிலாளர்களாகவே உள்ளனர்.

இந்து மதத்தை தழுவியவர்களாக பெரும்பாலும் மலேசியாவில் வசிக்கும் தமிழர்கள், இந்தியாவில் நடைமுறையில் உள்ள அசல் தைப்பூசத் திருவிழாவை விட வித்தியாசமான முறையில் கொண்டாடுகிறார்கள்.

Share
தொடர்புடையது
images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...