11 16
இலங்கைசெய்திகள்

அமெரிக்க மெம்பிஸ் விலங்கினச்சாலையின் ஆராய்ச்சி நிலையம் இலங்கையில்

Share

அமெரிக்க மெம்பிஸ் விலங்கினச்சாலையின் ஆராய்ச்சி நிலையம் இலங்கையில்

அமெரிக்காவின் மெம்பிஸ் (Memphis) விலங்கினச்சாலை, இலங்கையில் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் ஆராய்ச்சி நிலையத்தை இலங்கையில் செயற்பட வைப்பதே மெம்பிஸ் விலங்கினச்சாலையின் இலக்காகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எதிர்வரும் நவம்பரில் ஒரு முறையான திறப்பு நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையம் உயிரினங்களின் ஆராய்ச்சி, பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஒரு தளத்தை வழங்கும், மேலும் உள்ளூர் பல்கலைக்கழகங்கள் மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்களுக்கான ஆதாரமாக செயற்படும் என்று அமெரிக்க ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் இலங்கை, வெப்பமண்டல காலநிலை மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்பு ஆகியவற்றை கொண்டிருப்பதன் காரணமாக, பல்லுயிர் பன்முகத்தன்மையை கொண்டுள்ளது.

இருப்பினும் காடழிப்பு மற்றும் நில மாற்றம் இந்த தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை அச்சுறுத்துவதாக மெம்பிஸ் கருதுகிறது.

இந்தநிலையில், இலங்கையின் பல்லுயிர் மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் தொடர்பிலேயே மெம்பிஸின் இலங்கை நிலையம் செயற்படவுள்ளது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...