1 36
இலங்கைசெய்திகள்

தேர்தலுக்கான மொத்த செலவுத் தொகையை அறிவித்த அஞ்சல்துறை

Share

தேர்தலுக்கான மொத்த செலவுத் தொகையை அறிவித்த அஞ்சல்துறை

இலங்கையின் அஞ்சல் திணைக்களம், ஜனாதிபதி தேர்தலுக்கான, தமது மொத்த செலவின அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்காக 1.4 பில்லியன் தேவை என்று அஞ்சல் திணைக்களம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

அஞ்சல் கட்டணங்கள் தற்போது அதிகரித்துள்ளதால், தேர்தல் செலவுகள் அதிகரித்துள்ளதாக, அஞ்சல் மா அதிபர் பி.சத்குமார (P. Sathkumara ) தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமது திணைக்களம் குறிப்பிடத்தக்க பணியாளர் வெற்றிடங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தேர்தல் தொடர்பான பணிகளை திறம்பட நிறைவேற்ற 1,000 முதல் 2,000 அஞ்சல் பணியாளர்களுக்கு வெற்றிடங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்

பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ஓய்வுபெற்ற அஞ்சல் பணியாளர்களை பணியமர்த்துவதற்கு தேசிய தேர்தல் ஆணையகத்திடம் அனுமதி பெற திட்டமிட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் பி.சத்குமார தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...