24 66a42fe10d611
உலகம்செய்திகள்

மூன்றாம் உலகப்போர் குறித்து ட்ரம்ப் எச்சரிக்கை

Share

மூன்றாம் உலகப்போர் குறித்து ட்ரம்ப் எச்சரிக்கை

நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றிபெறாவிட்டால் மூன்றாம் உலகப் போர் உருவாகக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donal Trump) எச்சரித்துள்ளார்.

புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள ட்ரம்ப்பின் விடுதியில் இடம்பெற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குறித்த விடுதிக்கு நேற்று (26.07.2024) நெதன்யாகு தனது மனைவி சாராவுடன் விஜயம் செய்த போது ட்ரம்ப், அவர்களை விடுதியின் வாசல் வரை சென்று வரவேற்றார்.

இதன்போது, இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ட்ரம்ப் மூன்றாம் உலகப்போர் தொடர்பாக நெதன்யாகுவை எச்சரித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றிபெறும் பட்சத்தில் உலகின் அதிகாரப் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப்போருக்கு பின் எப்போதும் இல்லாத அளவுக்கு மூன்றாம் உலகப்போர் தொடர்பான கருத்து தற்போது வலுப்பெற்றுள்ளது.

இதற்கு காரணம் அமெரிக்காவை ஆளும் திறமையற்ற ஆட்சியாளர்கள் என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, ட்ரம்ப்பின் அறிவுறுத்தலுக்கமைய ஹமாஸுடன் (Hamas) போர் நிறுத்த உடன்படிக்கையை கொண்டு வர நெதன்யாகு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...