3 32
இலங்கைசெய்திகள்

பொலிஸ்மா அதிபர் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு!

Share

பொலிஸ்மா அதிபர் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு!

பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

இதன்போது, பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு பிரதமரால் உத்தியோகபூர்வமாக இன்று(26) அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஐஜிபியாக அவர் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமை மனுக்களில் இறுதித் தீர்ப்பு வரும் வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மனுக்களை தொடர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் தேசபந்து தென்னகோன் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக வெற்றிடமான பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மத்திய மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பொலிஸ் ஆணைக்குழுவும் பொலிஸ் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
001111
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தில் அலட்சியப்படுத்தப்பட்டதா புலனாய்வுத் துறையின் தகவல்கள்?

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் இடம்பெறுவதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பே புலனாய்வுப் பிரிவுகள் மூலம்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...