4 32 scaled
உலகம்

கனடாவில் வாடகை குடியிருப்பாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

Share

கனடாவில் வாடகை குடியிருப்பாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

கனடா (Canada) ரொறன்ரோவில் வாடகை என்ற போர்வையில் நடக்கும் மோசடிகளை தடுப்பதற்கு கனேடிய அரசாங்கத்தால் புதிய சட்டமொன்று உருவாக்கப்படவுள்ளது.

ரொறன்ரோவில் வாடகை வீட்டில் வசிப்போரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் சில அநீதியான விடயங்களை கருத்தில் கொண்டு ரொறன்ரோ நகர பேரவையினால் இந்த புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

ரொறன்ரோவில் வீடுகளை பழுதுபார்த்தால் மற்றும் புதுப்பிப்பதாக கூறி வாடகை வீட்டில் குடியிருப்போர் ஒப்பந்த காலத்திற்கு முன்னதாகவே அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

கூடுதல் தொகைக்கு வீட்டை வாடகைக்கு விடும் நோக்கின் இவ்வாறு வாடகை குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, இந்த சட்டம், ரொறன்ரோவில் வாடகைக்கு குடியிருப்போரை, இவ்வாறான காரணங்களால் வீட்டு உரிமையாளர்கள் திடீரென வீட்டை விட்டு வெளியேற்றுவதனை தடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த புதிய சட்டமானது எதிர்வரும் 2025ஆம் ஆண்டளவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
11 20
செய்திகள்உலகம்

ஈரானுக்கு எதிரான போரில் உலக நாடுகள் கைகோர்க்க வேண்டும்: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறைகூவல்!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அதற்கு ஆதரவான ஆயுதக் குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்...

10 19
உலகம்செய்திகள்

சுலோவீனியாவில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு: வாகனங்களுக்கு 50 லீற்றர் மாத்திரமே வழங்கக் கட்டுப்பாடு!

உக்ரைன் – ரஷ்ய போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் சங்கிலி பாதிப்பு மற்றும் எல்லை...

09 19
செய்திகள்உலகம்

ஈரானில் வரலாறு காணாத இணைய முடக்கம்: 23 நாட்களாக இருளில் மூழ்கியுள்ள 90 மில்லியன் மக்கள்!

ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியக் கூட்டுப் படைகளின் தாக்குதல்கள் மற்றும் உள்நாட்டுப் போராட்டங்களைத் தொடர்ந்து,...

05 20
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கு போர் 4-வது வாரத்தை எட்டியது: 22 நாடுகள் ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க – இஸ்ரேலியக் கூட்டுப் படைகளுக்கிடையிலான போர் இன்றுடன் 4-வது...