6 20
இலங்கைசெய்திகள்

தேர்தல்கள் காலம் நெருங்கி வரும் நிலையில் ஆணையம் எடுத்துள்ள அவசர முடிவு

Share

தேர்தல்கள் காலம் நெருங்கி வரும் நிலையில் ஆணையம் எடுத்துள்ள அவசர முடிவு

தேர்தலுக்கு தேவையான மை உள்ளிட்ட எழுதுபொருட்களை (Stationeries) அவசரமாக கொள்வனவு செய்ய தேர்தல் ஆணையம் (Election Commission) தீர்மானித்துள்ளது.

குறித்த பொருட்களை விநியோகம் செய்வதற்கான ஏலத்திற்கு நேற்றையதினம் (22.07.2024) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேர்தலில் பயன்படுத்தத் தேவையான அழியாத மை, எழுதுபொருட்கள், பேனா, பென்சில், கார்பன் பேப்பர், இணைப்பு ஊசிகள் மற்றும் அச்சு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய போட்டி முறையின் அடிப்படையில் ஏலங்களை ஆகஸ்ட் 2ஆம் திகதி வரை திறந்து வைத்து ஏலத்தொகையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்தல் தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...