tamilni 55 scaled
இந்தியாசெய்திகள்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி

Share

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அமலாக்கத்துறையினரால் அவர் கைது செய்யப்படும்போது, தனக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறி சிகிச்சை மேற்கொண்டார்.

இந்த நிலையில், நீதிமன்றக் காவல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு இன்று மதியம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறைவுக்கான காரணம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

எனினும், செந்தில் பாலாஜி தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறினார், அதன்பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...