12 8
இலங்கைசெய்திகள்

விரைவில் ஆரம்பமாகும் கட்டுநாயக்க விமான நிலைய ஜப்பானின் நிர்மாண செயற்திட்டம்

Share

விரைவில் ஆரம்பமாகும் கட்டுநாயக்க விமான நிலைய ஜப்பானின் நிர்மாண செயற்திட்டம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாவது முனைய நிர்மாணப் பணிகள், ஒரு வருட கால தாமதத்தின் பின்னர், ஜெய்கா என்ற ஜப்பானிய சர்வதேச முகவரகத்தின் சலுகைக் கடன் திட்டத்தின் கீழ் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதனை துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய இரண்டாவது முனையத்தின் கட்டுமானம், ஜெய்க்காவின், 145 பில்லியன் ரூபாய் மென் கடன் திட்டத்தின் கீழ் 2020ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் விளைவாக 2022 ஆம் ஆண்டில் இருந்து அந்த திட்டம் ஸ்தம்பித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு முடிவடையும் வரை இந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், விரைவில் ஆரம்பிக்கப்படும் விமான நிலையத் தரைத்தள மேம்படுத்தல் திட்டம், எதிர்வரும் நவம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்துக்காக, ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம், 564 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது.

எனினும், பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டில், அந்த நிதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 170
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்று முன்னோக்கிச் செல்வோம்: நாமல் ராஜபக்ச அழைப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தங்காலை, கால்டன் ஹவுஸில் இன்று (ஏப்ரல் 15) நடைபெற்ற...

world 169
செய்திகள்இலங்கைபிராந்தியம்

57.5 கிலோ இறந்த கோழி இறைச்சி மீட்பு – வர்த்தகருக்கு எதிராக வழக்கு!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட...

world 168
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் இறக்குமதியாளர்களுக்கு வரிப்பணம் மீளளிப்பு: புதிய நடைமுறை திங்கட்கிழமை ஆரம்பம்!

அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்களிடமிருந்து சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வசூலிக்கப்பட்ட...

world 167
செய்திகள்உலகம்

ஈரான் மீதான கடற்படை முற்றுகை: டொனால்ட் ட்ரம்பிற்கு அதிகரிக்கும் சர்வதேச அழுத்தங்கள்!

ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் ‘அதிகபட்ச அழுத்தம்’ கொடுக்கும் கொள்கையினால், அமெரிக்க ஜனாதிபதி...