2 16
இலங்கைசெய்திகள்

கிளப் வசந்த விவகாரம்: கொலையாளிகள் தொடர்பில் விசாரணை குழுக்கள் சந்தேகம்

Share

கிளப் வசந்த விவகாரம்: கொலையாளிகள் தொடர்பில் விசாரணை குழுக்கள் சந்தேகம்

அத்துருகிரியவில் கிளப் வசந்த உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களும் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என விசாரணை குழுக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இவர்கள் தென் கடற்பகுதியிலிருந்து படகில் நாட்டை விட்டு தப்பிச்சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.

இந்த வாடகை கொலையாளிகள் தப்பிச்சென்றுள்ளதாக தகவல் கிடைத்த பல இடங்களில் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சோதனையிட்ட போதிலும் அவர்கள் தொடர்பில் எவ்வித தடயமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துருகிரிய பிரதேசத்தில் (08) திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த உள்ளிட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி மற்றும் பாடகி சுஜீவா உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய இருவரும் பாதுகாப்புப்பிரிவில் இருந்தவர்கள் என சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது

மேலும், கிளப் வசந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 10 பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த தாக்குதலுக்கு பல்வேறு வழிகளில் ஆதரவளித்த 07 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களோ அல்லது அதை திட்டமிட்டவர்களோ இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...