24 6694729554efa
இலங்கைசெய்திகள்

பாதாள உலகக்குழுக்களின் உதவியை நாடும் அரசியல்வாதிகள்

Share

பாதாள உலகக்குழுக்களின் உதவியை நாடும் அரசியல்வாதிகள்

மாகந்துறை மதுஷிடம் பணத்தை முதலீடு செய்து அவரது மரணத்தின் பின்னர் பணத்தை மறைத்த பல அரசியல்வாதிகளும், மதுஷுடன் தொடர்பினை வைத்திருந்த பலரும் பல்வேறு பாதாள உலகக் குழுக்களின் உதவியை நாடியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மாகந்துரே மதுஷிடம் பல கோடி ரூபாவை முதலீடு செய்து திருப்பித் தராமல் மோசடி செய்த குற்றச்சாட்டில் கிளப் வசந்த அத்துருகிரியில் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து இவ்வாறு உதவியை நாடியுள்ளதாக டுபாயில் இருந்து கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கிளப் வசந்தவின் மரணத்திற்கு பின்னர் மாகந்துறை மதுஷிடம் பணத்தை மோசடி செய்த பலர் பயந்து, கஞ்சிபானை இம்ரானிடம் தங்களை காப்பாற்றுமாறும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

மாகந்துறை மதுஷின் மரணத்திற்குப் பின்னர், மதுஷின் வர்த்தக வலையமைப்பைக் கைப்பற்றி, மதுஷின் விசுவாசமான சீடர்களை கொன்று குவித்தவர்கள் அத்துருகிரிய சம்பவத்தின் பின்னர் அச்சமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாகந்துறை மதுஷுடன் இருந்த ரொடும்ப அமில, லொக்கு பட்டி, பொடி பட்டி போன்றவர்களின் குழுக்கள் மதுஷின் வலையமைப்பில் பணத்தினை வசூலித்து மதுஷின் கொலைக்கு பழிவாங்க ஆரம்பித்துள்ளமையினால் எதிரணியினர் அச்சமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...