4 15 scaled
சினிமா

வேள்பாரி குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த ஷங்கர்.. தமிழ் சினிமாவின் அடுத்த பிரமாண்ட படைப்பு

Share

வேள்பாரி குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த ஷங்கர்.. தமிழ் சினிமாவின் அடுத்த பிரமாண்ட படைப்பு

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படம் நாளை வெளிவரவுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியன் 3 படமும் விரைவில் வெளிவரவுள்ளது.

மேலும் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக ராம் சரணின் கேம் ஜேஞ்சர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவந்தது என சொல்லப்படுகிறது.

சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பங்கேற்ற இயக்குனர் ஷங்கரிடம், வேள்பாரி படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஷங்கர் ” அந்தக் கதையை நிறைய பேர் என்னை படிக்க சொன்னாங்க. அந்த நேரத்துல எனக்கு நேரம் கிடைக்கவில்லை. கொரோனா வந்ததுக்கு பிறகு வீட்டுல சும்மா இருந்த நேரத்துல படிக்கலாம்னு ஆரம்பிச்சேன்”.

“படிக்க படிக்க என் மனசுல காட்சிகளா விரிந்தது . படிச்சு முடிச்சதுமே இதை எப்படியாவது படமா பண்ணணும்னு தோணுச்சு. உடனே அதை எழுதிய சு.வெங்கடேசன்கிட்ட பேசி, அதுக்கான ரைட்ஸ் வாங்கிவிட்டேன். வேள்பாரி 3 பாடங்களாக திரைக்கதை எழுதி முடிச்சுட்டேன். ரெடியா இருக்கு. யார் நடிக்கிறாங்க என்பதை முடிவு பண்ணல” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...