13 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனியாக தவித்த வெளிநாட்டவர்

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனியாக தவித்த வெளிநாட்டவர்

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் தனியாக தவித்த சீன பிரஜை ஒருவருக்கு விமான நிலைய சுற்றுலா பொலிஸ் நிலைய அதிகாரிகள் உதவியுள்ளனர்.

கடந்த 28ஆம் திகதி 65 வயதான சீன பிரஜை ஒருவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். எனினும் அவரின் பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் சீனாவுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார்.

குறித்த நபர் சீனாவுக்கு செல்வதற்கான விமானப் பயணச்சீட்டு மற்றும் உணவு இன்றி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது.

இது குறித்து தகவலறிந்த விமான நிலைய சுற்றுலா பொலிஸ் நிலையத்தின் அதிகாரி அடுத்தகட்ட நடவடிக்களை மேற்கொண்டனர்.

முதற்கட்டமாக குறித்த சுற்றுலா பயணிக்கு தேவையான உணவு மற்றும் பானங்களை வழங்கியுள்ளனர்.

அத்துடன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகமவின் நேரடி தலையீட்டின் மூலம், சீனத் தூதரகத்தின் ஊடாக அவருக்கு பயணச் சீட்டு அனுப்பி வைக்கப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து குறித்த சீனப் பிரஜை நேற்று முன்தினம் யுஎல்-884 விமானம் சீனாவுக்கு சென்றுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...