9 2
இலங்கைசெய்திகள்

மோசடி வழக்கு வர்த்தகர் விரஞ்சித் தம்புகலவின் வங்கி கணக்கில் பல மில்லியன் டொலர்கள்

Share

மோசடி வழக்கு வர்த்தகர் விரஞ்சித் தம்புகலவின் வங்கி கணக்கில் பல மில்லியன் டொலர்கள்

இலங்கையில், நாடளாவிய ரீதியில் விழாக்கள் மற்றும் கச்சேரிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் பிரபலமடைந்த வர்த்தகர் விரஞ்சித் தம்புகல (Viranjith Thambugala,), 2022 ஆம் ஆண்டில் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை தனது கணக்கில் பெற்றுள்ளதாக நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் (Dileepa Peiris) கொழும்பு மேலதிக நீதவானிடம், இதனை தெரிவித்துள்ளார்.

எழுபது மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தம்புகலவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குறித்த வழக்கை கையாள்வதற்காக கப்பம் கோருவது குறித்து இரகசியமான அல்லது கேமராவில் வாக்குமூலம் வழங்குவது போன்ற செயல்களால்,நீதிமன்ற அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக திலீப குற்றம் சுமத்தினார்.

இவ்வாறான நடவடிக்கைகள் நிதி மோசடி மற்றும் சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளை மோசமாக பாதிக்கும் என அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், சந்தேகநபர் வர்த்தகர் என்ற போதிலும், அவரது பெயரில் பதிவுசெய்யப்பட்ட வர்த்தக இடமோ அல்லது தொடர்புடைய கணக்காளரோ கண்டுபிடிக்கப்படவில்லை என திலீப பீரிஸ் தெரிவித்தார்.

இந்தநிலையில் குறித்த வழக்கு அக்டோபர் 3ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...