9 2
இலங்கைசெய்திகள்

மோசடி வழக்கு வர்த்தகர் விரஞ்சித் தம்புகலவின் வங்கி கணக்கில் பல மில்லியன் டொலர்கள்

Share

மோசடி வழக்கு வர்த்தகர் விரஞ்சித் தம்புகலவின் வங்கி கணக்கில் பல மில்லியன் டொலர்கள்

இலங்கையில், நாடளாவிய ரீதியில் விழாக்கள் மற்றும் கச்சேரிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் பிரபலமடைந்த வர்த்தகர் விரஞ்சித் தம்புகல (Viranjith Thambugala,), 2022 ஆம் ஆண்டில் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை தனது கணக்கில் பெற்றுள்ளதாக நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் (Dileepa Peiris) கொழும்பு மேலதிக நீதவானிடம், இதனை தெரிவித்துள்ளார்.

எழுபது மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தம்புகலவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குறித்த வழக்கை கையாள்வதற்காக கப்பம் கோருவது குறித்து இரகசியமான அல்லது கேமராவில் வாக்குமூலம் வழங்குவது போன்ற செயல்களால்,நீதிமன்ற அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக திலீப குற்றம் சுமத்தினார்.

இவ்வாறான நடவடிக்கைகள் நிதி மோசடி மற்றும் சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளை மோசமாக பாதிக்கும் என அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், சந்தேகநபர் வர்த்தகர் என்ற போதிலும், அவரது பெயரில் பதிவுசெய்யப்பட்ட வர்த்தக இடமோ அல்லது தொடர்புடைய கணக்காளரோ கண்டுபிடிக்கப்படவில்லை என திலீப பீரிஸ் தெரிவித்தார்.

இந்தநிலையில் குறித்த வழக்கு அக்டோபர் 3ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Share
தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...