24 66891cbe58c08
இலங்கைசெய்திகள்

கொழும்பில் உயிரிழந்த மாணவர்கள் தொடர்பில் மர்மம்

Share

கொழும்பில் உயிரிழந்த மாணவர்கள் தொடர்பில் மர்மம்

அண்மையில் கொழும்பில் உயிரிழந்த சர்வதேச பாடசாலை மாணவர்கள், இருவர் தொடர்பில் பல்வேறுபட்ட, முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய தகவல்களின்படி உயிரிழந்த மாணவனின் தந்தை மிகப்பெரும் பணக்காரர் என்பது தெரியவந்துள்ளது.

உலகளாவிய ரீதியில் செயற்படும் சிகையலங்கார தொழில்துறையில் தந்தை ஈடுபட்டு வரும் நிலையில் அவருக்கு உலகின் பல நாடுகளில் அதற்கான கிளைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் டெல்லியை தளமாக கொண்டு செயற்படும் குறித்த சலூன் இலங்கையிலும் மிகவும் பிரபல்யம் அடைந்த ஒன்றாகும். அத்துடன் அவரும், குடும்பத்தினரும் வெள்ளவத்தை பகுதியிலுள்ள ஆடம்பர வீடொன்றில் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் உயிரிழந்த மாணவனுக்கும் மாணவிக்கும் இடையில் நெருக்கமான உறவு உள்ளதுடன், அதனை மாணவனின் தந்தை கடுமையாக எதிர்த்துள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று பாகிஸ்தானை சேர்ந்த கோடிஸ்வரர் ஒருவருக்கு சொந்தமான வீட்டுக்கு செல்வதாக கூறி குறித்த இருவரும் அங்கு சென்றுள்ளனர்.

குறித்த கோடிஸ்வர பாகிஸ்தானிய வர்த்தகரின் மகனின் நெருங்கிய நண்பர்களாக, உயிரிழந்த மாணவனும் மாணவியும் இருந்துள்ளனர். பாக்கிஸ்தான் வர்த்தகரின் வீடு, தொடர்மாடியின் 63ஆவது மாடியில் அமைந்துள்ளது.

முன்னதாக, மாணவர்களின் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்ட போதும், இதுவரை அது உறுதி செய்யப்படாத நிலையில் மர்மம் நீடித்து வருகிறது.

67ஆவது மாடியில் இருந்து வீழ்ந்த போதும் குறித்த இரண்டு மாணவர்களின் உடலங்களும் மூன்றாம் மாடியின் குளிரூட்டல் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன, அதுவும் ஒரே இடத்தில் சடலம் மீட்கப்பட்டமை குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று, மூன்றாம் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கையளித்த பொதி ஒன்றை, உயிரிழந்த மாணவன் கீழே சென்று பெற்று வந்ததாக சிசிரிவி காணொளிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

எனினும் குறித்த நபர் மூலம் பெறப்பட்ட பொதி குறித்து மர்மம் நீடிக்கிறது. அதேநேரம் உயிரிழந்த மாணவர்களின் உடமைகளுக்கு அருகில் சிகரெட் பெட்டியும், வெற்று தபால் உறையும் பொலிஸாரினால் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...