tamilni 12 scaled
உலகம்செய்திகள்

மனைவிகளுடன் ஜோடியாக வந்து வாக்களித்த ரிஷி சுனக்-கெய்ர் ஸ்டார்மர்

Share

மனைவிகளுடன் ஜோடியாக வந்து வாக்களித்த ரிஷி சுனக்-கெய்ர் ஸ்டார்மர்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் எதிர்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் இருவரும் தங்கள் மனைவிகளுடன் ஜோடியாக வந்து வாக்களித்துச் சென்றனர்.

பிரித்தானியாவில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஜூலை 04) நடைபெற்றுவருகிறது.

கன்சர்வேடிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் மற்றும் தொழிலாளர் கட்சியின் வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் இன்று காலை தங்கள் மனைவிகளுடன் வாக்குச்சாவடிக்கு சென்றனர்.

சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி யார்க்ஷயரில் வாக்களித்தனர். ஸ்டார்மர் தனது மனைவி விக்டோரியாவுடன் வடக்கு லண்டனில் உள்ள கென்டிஷ் டவுனில் வாக்களித்தார்.

இம்முறை பிரித்தானியாவில் திட்டமிட்ட கால அட்டவணைக்கு 6 மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்தப்படுகிறது. பிரதமர் சுனக் இதை மே 22 அன்று அறிவித்தார்.

இன்று 5 கோடி வாக்காளர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கான பிரித்தானியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எம்.பி.க்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு ( இலங்கை நேரப்படி 05 ஜூலை அதிகாலை 2:30) முடிவடையும்.

பிரித்தானியாவில் வாக்குச் சீட்டு மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், அங்குள்ள குடிமக்கள் மட்டுமின்றி பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையர்கள், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், அவுஸ்திரேலியர்கள் போன்ற காமன்வெல்த் நாடுகளின் குடிமக்களும் வாக்களிக்கலாம்.

Share
தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...