24 667f7cfe0ff26 12
உலகம்செய்திகள்

மேற்கத்திய எதிர்ப்பு கூட்டணி..ஆசிய நாட்டிற்கு வந்தடைந்த விளாடிமிர் புடின்

Share

மேற்கத்திய எதிர்ப்பு கூட்டணி..ஆசிய நாட்டிற்கு வந்தடைந்த விளாடிமிர் புடின்

பிராந்திய உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கஜகஸ்தான் நாட்டிற்கு வந்தடைந்தார்.

பெய்ஜிங் தலைமையில் மத்திய ஆசியா, இந்தியா மற்றும் ஈரான் நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய முகாமான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டம் கஜகஸ்தானில் நடைபெறுகிறது.

நேற்றைய தினம் சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) இதில் பங்கேற்க வந்திருந்தார். இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும், கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவிற்கு வந்து சேர்ந்தார்.

மேற்கத்திய எதிர்ப்பு கூட்டணிகளை கடினப்படுத்தவும், மூலோபாய மத்திய ஆசிய பிராந்தியத்தில் தங்கள் செல்வாக்கை அழுத்தவும் இருநாட்டு தலைவர்களும் முயல்வதாக கூறப்படுகிறது.

மேலும் புடின் மற்றும் ஜி ஜின்பிங் இருவரும் SCOவை, Eurasia முழுவதும் தங்கள் மூலோபாய நலன்களை முன்னேற்றுவதற்கான ஒரு முக்கிய மன்றமாக பார்க்கின்றனர்.

புடின் வருகைக்கு முன்பாக, கிரெம்ளின் உதவியாளர் Yury Ushakov ரஷ்ய ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

”SCO என்பது BRICSயின் இரண்டாவது பாரிய சங்கம் என்று நாங்கள் நம்புகிறோம். இவை இரண்டும் புதிய உலக ஒழுங்கின் முக்கிய தூண்கள். இது உலக விவகாரங்களில் உண்மையான பன்முகத்தன்மையை நிறுவும் சூழலில் ஒரு Locomotive ஆகும்” என தெரிவித்தார்.

 

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...