rrrr scaled
இலங்கைசெய்திகள்

பெண்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : கிடைக்கப்போகும் கடன்வசதி

Share

பெண்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : கிடைக்கப்போகும் கடன்வசதி

பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உள்ள தடைகளை நீக்கும் வகையில் விசேட கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2 பில்லியன் ரூபா ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, இலங்கையின் பொருளாதார விவகாரங்களில் பெண்களின் பங்களிப்பு ஏனைய பிராந்திய மற்றும் ஆசிய நாடுகளை விட குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது.

2022 ஆம் ஆண்டு இலங்கையின் பணியாளர்களின் கணக்கெடுப்பின்படி, பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான சனத்தொகையில் முப்பத்தைந்து வீதமானவர்கள் பெண்கள் ஆவர். இது பொருளாதார பங்கேற்பின் பாலின பங்களிப்பு விகிதங்களில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வைக் காட்டுகிறது.

பெண்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : கிடைக்கப்போகும் கடன்வசதி | Special Loan Scheme For Women

பெண்களின் வரையறுக்கப்பட்ட நிதி, கல்வியறிவு மற்றும் கடன் பெறுவதற்கு தேவையான சொத்து அல்லது பாதுகாப்பு இல்லாமை போன்ற காரணங்களால் நிதி ஆதாரங்களை அணுகுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

இலங்கையில் பெண் தொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் பிரதான தடைகளாக இவை இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பெப்ரவரி 2024 இல் அமைச்சரவையின் முடிவின்படி, . நிறுவனத் துறையை மீண்டும் வலுப்படுத்தும் முதலீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ரூ 20 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உள்ள தடைகளை நீக்கும் வகையில் விசேட கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அதிபரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...