tamilni Recovered scaled
உலகம்செய்திகள்

பாதசாரிகள் மீது வாகனத்துடன் பாய்ந்த சாரதி: பலரை பலி வாங்கிய கொடூரம்

Share

பாதசாரிகள் மீது வாகனத்துடன் பாய்ந்த சாரதி: பலரை பலி வாங்கிய கொடூரம்

தென் கொரியாவில் நடுங்கவைக்கும் வாகன விபத்து ஒன்றை ஏற்படுத்திய சாரதி கொலை வழக்கு விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் திங்களன்று இரவு பாதசாரிகள் பலர் சாலையை கடக்க கூட்டமாக காத்திருந்த நிலையில், டாக்ஸி ஒன்று வேகமாக அவர்கள் மீது பாய்ந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், அந்த வாகனம் தவறான திசையில் பயணித்துள்ளதும், வேறு இரு கார்கள் மீது மோதியுள்ளதும் தெரிய வந்தது. ஆனால் பாதசாரிகள் மீது மோதிய சம்பவத்தில் 9 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

மேலும், சாரதி உட்பட 6 பேர்கள் காயங்களுடன் தப்பினர். அந்த சாரதி சம்பவயிடத்திலேயே கைது செய்யப்பட்டார். மேலும், அந்த சாரதி மது அல்லது போதை மருந்து பயன்படுத்தியதாக சோதனையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக விசாரணையின் போது அந்த சாரதி கூறியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைதாணைக்கு முயன்று வருவதாகவும், அதன் பின்னரே உரிய விசாரணை முன்னெடுக்கப்படும் என்றும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அவர் வாகனமும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சாரதி குறித்த தகவல்களை வெளியிட பொலிசார் மறுத்திருந்தாலும், உள்ளூர் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலில், அந்த நபர் 60 வயது கடந்தவர் என்றும், பேருந்து சாரதியாக பணியாற்றியவர் என்றும், சாரதியாக 40 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...