5 2
இந்தியாசெய்திகள்

பிரதமர் மோடி இந்துக்களின் பிரதிநிதி அல்ல: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

Share

பிரதமர் மோடி இந்துக்களின் பிரதிநிதி அல்ல: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

இந்தியாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்களவை முதல் கூட்டத் தொடரில் பாரதிய ஜனதாக்கட்சிக்கும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளுக்கும் இடையில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதிர்க்கட்சி தலைவரும் காங்கிஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்ச்சித்த நிலையிலேயே இந்த வாதப்பிரதிவாதங்கள் தீவிரமாகியுள்ளன.

பிரதமர் மோடி பரமாத்மாவுடன் கூட பேசுவார்.ஆனால் மணிப்பூர் மக்களுடன் பேச மாட்டார் என இதன்போது ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

மணிப்பூரில் கடந்த பல மாதங்களாக வன்முறைகள் இடம்பெற்ற போதும் பிரதமர் மோடி அங்கு செல்லாமை மற்றும் அந்த பிரச்சினையை தீர்க்காமை என்பவற்றை மையப்படுத்தியே இந்த விமர்சனத்தை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, தமக்கு கடவுளுடன் நேரடி தொடர்பு இருப்பதாக கூறுகிறார். அவர் நேரடியாகவே பரமாத்மாவுடன் பேசுவார். பரமாத்மாவும் நேரடியாகவே மோடியின் ஆன்மாவோடு பேசுவார்.

இந்தநிலையில் தாம் உட்பட்ட எல்லோரும் உயிரில் ரீதியாக பிறப்போம், மரணத்தை தழுவுவோம். ஆனால் பிரதமர் அப்படிப்பட்டவர் அல்லர்.

அவர் பரமாத்மாவிடம் கேட்டு தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தாரா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது, குறுக்கிட்ட பிரதமர் நரேந்திர மோடி, “ராகுல் காந்தி இந்துக்களை வன்முறையாளர்கள் போல சித்தரிக்க முயலுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

எனினும், அதனை மறுத்த ராகுல் காந்தி, மோடி இந்தியாவின் பிரதமர் மட்டுமே. அவர் இந்துக்களின் பிரதிநிதி அல்ல, உண்மையான இந்துக்கள் வெறுப்புணர்வை தூண்ட மாட்டார்கள் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...