24 667f7cfe0ff26 28
உலகம்செய்திகள்

ரஷ்யாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் தீ விபத்து..5 பேர் பலியான சோகம்

Share

ரஷ்யாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் தீ விபத்து..5 பேர் பலியான சோகம்

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர்.

மாஸ்கோவின் பலக்ஷிகா (Balashikha) புறநகர் பகுதியில் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இங்கு வெளிநாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட பல பணியாளர்கள் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இரண்டாவது மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மள மளவென தீ பரவியதைத் தொடர்ந்து பலர் உயிர் பயத்தில் சன்னல் வழியாக வெளியே குதித்து தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, பலரை அங்கிருந்து பத்திரமாக மீட்டனர்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக 5 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் சிலர் காயமடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

 

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...