உலகம்செய்திகள்

வரியை அதிகரித்து… மீளமுடியாத சேதத்தில் தள்ளுவார்கள்: லேபர் கட்சி குறித்து ரிஷி சுனக் காட்டம்

Share

வரியை அதிகரித்து… மீளமுடியாத சேதத்தில் தள்ளுவார்கள்: லேபர் கட்சி குறித்து ரிஷி சுனக் காட்டம்

அசுர பலத்துடன் லேபர் கட்சி ஆட்சிக்கு வரும் என்றால் முதல் 100 நாட்களில் பிரித்தானியாவை மீளமுடியாமல் சேதத்தில் தள்ளுவார்கள் என ரிஷி சுனக் எச்சரித்துள்ளார்.

பிரித்தானியா தனது வரிகளையும் எல்லைகளையும் பாதுகாப்பையும் சர் கீர் ஸ்டார்மரிடம் ஒப்படைத்துவிடாது என்றும் ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்துள்ள ரிஷி சுனக், லேபர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் வரி உயர்வு உறுதி என்றும் சட்டவிரோத குடியேறிகளை நாட்டுக்குள் அனுமதித்து பிரித்தானியத் தெருக்களில் இனி அவர்களின் நடமாட்டம் எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வியாழக்கிழமை பிரித்தானிய மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க செல்ல உள்ள நிலையிலேயே ரிஷி சுனக் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேலும், லேபர் கட்சி ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் மீள முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகிறது என்றார்.

லேபர் கட்சியை நம்ப முடியாது என குறிப்பிட்டுள்ள ரிஷி சுனக், நமது வரிகள், எல்லைகள் மற்றும் நமது பாதுகாப்பை அவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியை விடவும் 20 புள்ளிகள் லேபர் கட்சி முன்னிலையில் இருப்பதாலும், வெளியான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மிக மோசமான தோல்வி ஏற்படும் என குறிப்பிட்டுள்ள நிலையிலேயே ரிஷி சுனக் லேபர் கட்சி தொடர்பில் காட்டமாக விமர்சித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...