2 14
உலகம்செய்திகள்

படிக்கவைப்பதாக அழைத்துவந்து கொடுமைப்படுத்திய இந்திய வம்சாவளி தம்பதிக்கு சிறை

Share

படிக்கவைப்பதாக அழைத்துவந்து கொடுமைப்படுத்திய இந்திய வம்சாவளி தம்பதிக்கு சிறை

இந்தியாவிருந்து உறவினர் ஒருவரை அமெரிக்காவில் படிக்கவைப்பதாக அழைத்துவந்து கொடுமைப்படுத்திய இந்திய வம்சாவளி தம்பதிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளி தம்பதியினர், தங்கள் உறவினர்களில் ஒருவரை பாடசாலையில் படிக்கவைப்பதாக கூறி அமெரிக்காவிற்கு அழைத்து வந்து பெட்ரோல் பம்ப் மற்றும் ஜெனரல் ஸ்டோரில் கட்டாயப்படுத்தி 3 ஆண்டுகள் வேலை செய்யவைத்துள்ளனர்.

அமெரிக்க நீதிமன்றம் இந்த தம்பதிக்கு 11.25 ஆண்டுகள் (135 மாதங்கள்) சிறைத்தண்டனை விதித்துள்ளது.

31 வயதான இந்திய அமெரிக்க குடிமகன் ஹர்மன்பிரீத் சிங் (Harmanpreet Singh) மற்றும் அவரது 43 வயது மனைவி குல்பீர் கவுர் (Kulbir Kaur) ஆகியோர் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.87 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹர்மன்ப்ரீத்தும் குல்பீரும் இப்போது விவாகரத்து பெற்றனர்.

செய்தி நிறுவனமான PTI-யின் அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தவறான வாக்குறுதிகளின் பேரில் தங்கள் உறவினரை அமெரிக்காவிற்கு அழைத்து வந்துள்ளனர்.

அதன் பிறகு, அவர்கள் அந்த நபரின் கடவுச்சீட்டு மற்றும் குடியேற்ற ஆவணங்களை பறித்து வைத்துக்கொண்டுள்ளனர்.

மேலும், அவரை சித்திரவதை செய்து, தங்களது கடையில் மணிக்கணக்கில் வேலை செய்ய வைத்துள்ளனர். அந்த வேலைக்கு அவருக்கு மிகக் குறைந்த பணமே வழங்கப்பட்டுள்ளது.

தம்பதிகள் பாதிக்கப்பட்ட அந்த அண்ணாத்துரை 12-17 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்ய வைத்துள்ளனர்.

மேலும் அவர் வேலையை விட்டு வெளியேற முயற்சித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் மார்ச் 2018 முதல் மே 2021 வரை வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

அவர் சுத்தம் செய்தல், சமைத்தல், கடையில் பொருட்களை சேமித்தல், பணப் பதிவேட்டைக் கையாளுதல் போன்ற வேலைகளைச் செய்ய வைக்கப்பட்டுள்ளார்.

12-17 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்தாலும், பதிலுக்கு, அவருக்கு சரியான உணவு கூட வழங்கப்படவில்லை.

மேலும், அவர் மருத்துவம் மற்றும் கல்வி வசதிகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.

கடையில் பொருத்தப்பட்டிருந்த கமெரா மூலம் அவரைத் தம்பதியினர் கண்காணித்துவந்துள்ளனர். அவர் இந்தியா செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்டவரின் விசா காலாவதியான பிறகு, குல்பீர் கவுரை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அவர் தப்பி ஓட முயன்றால், அவரது குடும்பத்தினரின் பணம் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் பறித்துவிடுவோம் என்று குல்பீர் மிரட்டியுள்ளார்.

அவர்கள் அவரது தலைமுடியை இழுத்து உதைத்தனர். இது தவிர, பாதிக்கப்பட்டவர் விடுப்பு கேட்டபோது, ​​துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
19 3
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையை உலுக்கிய இரட்டை படுகொலை – பின்னணி தொடர்பில் வெளியான பகீர் தகவல்

தென்னிலங்கையில் இளம் தம்பதியை கொடூரமாக கொலை செய்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹுங்கம,...

18 4
இலங்கைசெய்திகள்

பெண் மருத்துவரை துர்நடத்தைக்கு உட்படுத்திய நபர் விடுவிக்கப்பட்டு மீண்டும் கைது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக துர்நடத்தைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக...

17 4
இலங்கைசெய்திகள்

இலங்கையின் பேரழகு தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவி பெருமிதம்

இலங்கையின் கலாசாரத்தை பார்த்து நெகிழ்ச்சியடைவதாக அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட மகளீர் கிரிக்கெட் அணியின் தலைவி சமாரா...

16 4
இலங்கைசெய்திகள்

20 தமிழ் – சிங்கள தம்பதியினருக்கு வவுனியாவில் திருமணம்

வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிசார்ட் பதியுதீனால் 20...