24 66758d7e33f73
உலகம்செய்திகள்

ரஷ்யாவில் உயர்கல்வி: கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் மோசடியில் சிக்கிய நபர்

Share

ரஷ்யாவில் உயர்கல்வி: கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் மோசடியில் சிக்கிய நபர்

ரஷ்யாவில் உயர்கல்வி வழங்குவதாகக் கூறி இலங்கை முழுவதிலும் உள்ள மாணவர்களை சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று பணத்தை ஏமாற்றியதாக கூறப்படும் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளது.

சந்தேகநபர் வத்தளை, ஹுனுப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

ரஷ்யாவில் உயர் கல்விக்காக கட்டான பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை ஏமாற்றியதாக நீர்கொழும்பு விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பெறப்பட்ட விமானத் தடையைப் பயன்படுத்திய அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு மேலதிகமாக மாத்தறை தலைமையக பொலிஸாருக்கு 17 முறைப்பாடுகளும், குளியாப்பிட்டிய பொலிஸில் 02 முறைப்பாடுகளும், குருநாகல் பொலிஸில் 03 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும், இவர் தொடர்பில் வாதுவ, அம்பாறை மற்றும் மொரட்டுவ பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரோஹன முனசிங்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேராவின் பணிப்புரைக்கமைய நீர்கொழும்பு விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரோஹன முனசிங்கவின் மேற்பார்வையில் அதிகாரிகள் குழுவினால் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...

dinamani 2025 11 28 gas8xazv AP25332344411320 750x430 1
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் புயல் வெள்ளப் பலி 631 ஆக உயர்வு: மீட்புப் பணிகள் தொடர்கின்றன!

இந்தோனேஷியாவின் அசேப் மாகாணம் மற்றும் சுமத்ரா தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட புயல்கள் மற்றும் கடும்...