13 6
இலங்கைசெய்திகள்

அரசாங்கம் உள்நாட்டு சந்தையில் பெருந்தொகை கடன்

Share

அரசாங்கம் உள்நாட்டு சந்தையில் பெருந்தொகை கடன்

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் மே 31ஆம் திகதி வரையில் சுமார் 3,380 பில்லியன் ரூபாவை அரசாங்கம் உள்நாட்டு சந்தையில் கடனாகப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 13ஆம் திகதி வெளியிடப்பட்ட மத்திய வங்கியின் பகுப்பாய்வு அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இங்கு 05 மாதங்களில் சுமார் 3085 பில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்கள் மூலமாகவும் 785 பில்லியன் ரூபாவை திறைசேரி பத்திரங்கள் மூலமாகவும் அரசாங்கம் கடனாக பெற்றுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 878 பில்லியன் ரூபாவும், பெப்ரவரி மாதத்தில் 661 பில்லியன் ரூபாவும், மார்ச் மாதத்தில் 843 பில்லியன் ரூபாவும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 720 பில்லியன் ரூபாவும், இதன் பின்னர் 779 பில்லியன் ரூபாவும் கடனாகப் பெறப்பட்டுள்ளது.

சராசரியாக ஒரு மாதத்தில் பெறப்பட்ட உள்நாட்டுக் கடன் தொகை 775 பில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும், ஒரு நாளில் எடுக்கப்பட்ட சராசரி கடன் தொகை சுமார் 25 பில்லியன் ரூபா எனவும் பேராசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

அரசாங்கம் வாங்கிய கடன் பணமும் இதுவரை பெற்ற மற்றைய கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக செலவழிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...